குறைந்த விலையில் தங்கம் – 8 லட்சம் ரூபாய் மோசடி…!

பொள்ளாச்சியில் குறைந்த விலையில் தங்கம் வாங்கி தருவதாக கூறி, சுமார் 8 லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பலை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆரோக்கியராஜ் என்பவரிடம் குறைந்த விலையில் தங்கம் வாங்க பொள்ளாச்சி அருகிலுள்ள அம்பராம்பாளையம் பகுதிக்கு வருமாறு பார்த்தசாரதி என்பவர் வரவழைத்துள்ளார். இதனை நம்பி சுமார் 8 லட்ச ரூபாயுடன் சென்ற ஆரோக்கியராஜிடம் தங்கம் விற்பனை செய்வது போல் நடித்து, அவரது பணத்தை ஒரு கும்பல் பறித்துக் கொண்டு தப்பியது.

இதுதொடர்பான புகாரில், பார்த்தசாரதியிடம் போலீஸ் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ஆரோக்கியராஜை ஏமாற்றி பணம் பறிக்க திட்டமிட்டத்தை பார்த்தசாரதி ஒப்புக்கொண்டார். இதனையடுத்து அவரை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார், அவரது கூட்டாளிகள் 6 பேரை தேடி வருகின்றனர்.

Exit mobile version