உலக கராத்தே போட்டியில் தங்கம், வெள்ளி வென்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா

மலேசியாவில் நடைபெற்ற உலகளவிலான கராத்தே சாம்பியன் போட்டியில் தமிழக மாணவர்கள் பதக்கங்களை வென்று சாதனைப் படைத்துள்ளனர்.

இந்தப் போட்டியில் 29 நாடுகளைச் சேர்ந்த 600 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இதில் சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் கராத்தே பயிற்சி பள்ளியை சேர்ந்த 11 மாணவர்கள் பங்கேற்று 4 தங்கம், 7 வெள்ளி பதக்கங்களை வென்று சாதனைப் படைத்துள்ளனர். வெற்றி பெற்று தாயகம் திரும்பிய மாணவர்களுக்கு கராத்தே பயிற்சி பள்ளியில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கராத்தே பயிற்சியாளர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டினர்.

Exit mobile version