இன்று மாலை மீண்டும் தங்கத்தின் விலை குறைந்தது

தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து 30 ஆயிரத்தை தாண்டிய நிலையில், இன்று மாலை மீண்டும் விலை குறைந்துள்ளது.

தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வந்த தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் 288 ரூபாய் அதிகரித்து சவரனுக்கு 30ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்டது. இந்த நிலையில் இன்று மாலை விலைசற்று குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில் 24 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் 12 ரூபாய் உயர்ந்து 3 ஆயிரத்து 898 ரூபாய்க்கும், ஒரு சவரனுக்கு 96 ரூபாய் உயர்ந்து, 31 ஆயிரத்து 184 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிக்கு 12 ரூபாய் அதிகரித்து 3ஆயிரத்து 741 ரூபாய்க்கும், ஒரு சவரனுக்கு 96 ரூபாய் உயர்ந்து 29 ஆயிரத்து 928 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியை பொறுத்தவரை ஒரு கிராம் வெள்ளி 40 காசுகள் குறைந்து 54 ரூபாய் 80 காசுகளாகவும், ஒரு கிலோ பார் வெள்ளி 400 ரூபாய் குறைந்து 54 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

Exit mobile version