சென்னை பூந்தமல்லியில் தேர்தல் விதிமுறைகளை மீறி மசூதிக்குள் சென்று திமுகவினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகம் முழுவதும் இன்னும் சில தினங்களில் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரசாரத்தின் போது பல்வேறு தேர்தல் விதிமுறை மீறல்களை திமுகவினர் மேற்கொண்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
எந்த மதத்தை சேர்ந்த புனித தலத்திற்குள் சென்று வாக்கு சேகரிக்கக் கூடாது என்ற தேர்தல் விதிமுறை உள்ள நிலையில், சென்னை பூந்தமல்லியில் மசூதிக்குள் சென்று திமுகவினர் இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். கைகளில் உதயசூரியன் சின்னத்தை ஏந்தி அவர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் தொடர்ந்து அராஜகம் மற்றம் தேர்தல் விதிமீறல்களில் ஈடுபடும் திமுகவினர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Discussion about this post