சபரிமலையின் புனிதத்தை கெடுப்பவர்களை அய்யப்பன் தண்டிப்பார்

கேரள அரசை அய்யப்பன் தண்டிப்பார் என பிரபல நடிகரும், பாஜக மேல்சபை உறுப்பினருமான சுரேஷ்கோபி தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் சுசிந்திரத்தில் உயர் மின் கோபுரம் அமைக்க மேல்சபை உறுப்பினரும் பிரபல திரைப்பட நடிகருமான சுரேஷ்கோபி மூன்று லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்தார்.அதன் படி உயர் மின் கோபுரம் அமைக்கப்பட்டு அது மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சுரேஷ்கோபி கேரளாவில் இந்த அரசிற்கு ஒட்டு போட்டது தவறாகி விட்டது என மக்கள் நினைக்கும் நிலை தற்போது உள்ளது என்று கூறினார். இது நாள் வரை ஆச்சாரத்துடன் செயல்பட்ட சபரிமலையின் புனிதத்தை கெடுப்பவர்களை அய்யப்பன் தண்டிப்பார் என அவர் கூறினார்.

Exit mobile version