”தடுப்பூசி வேண்டாம்னா இந்தியாவுக்கு போயிடு” – பிலிப்பைன்ஸ் அதிபர்

‘தடுப்பூசி வேண்டாம் என்பவர்கள், இந்தியாவுக்கோ அல்லது வேறு நாட்டுக்கோ செல்லுங்கள்’ எனக்கூறி சர்ச்சையை ஏற்படுத்திய பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுடெர்டே

பிலிப்பைன்சில் கோவிட் தடுப்பூசி போட மறுப்பவர்களை கைது செய்யப்போவதாக எச்சரிக்கை விடுத்திருந்த அந்நாட்டு அதிபர் ரொட்ரிகோ டுடெர்டே, ‘தடுப்பூசி வேண்டாம் என்பவர்கள், இந்தியாவுக்கோ அல்லது வேறு நாட்டுக்கோ செல்லுங்கள்’ எனக்கூறி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.

பிலிப்பைன்சில் நாடு முழுவது கோவிட் தொற்று மோசமாக பரவி வருகிறது.

கோவிட் பரவலைத் தடுக்க தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம். ஆனால் பலரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வருவதில்லை . தடுப்பூசி போடாதவர்களை கைது கைது செய்து, தடுப்பூசி போடுவோம் என்று எச்சரித்து வரும் பிலிப்பைன்ஸ் அரசு, 

ஏற்கெனவே பெருந்தொற்று பேரிடரால் அவதியுற்று இருக்கும் அரசுக்கு, தடுப்பூசி போடமாட்டேன் எனக்கூறி மேலும் மேலும் சுமையை கூட்டுகிறீர்கள் என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார் பிலிப்பைன்ஸ் அதிபர்,

இவ்வளவு எடுத்துரைத்த பிறகும், உங்களுக்கு தடுப்பூசி வேண்டாமென்றால், இந்த நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவுக்கு செல்லுங்கள், அல்லது உங்களுக்கு வேறு ஏதேனும் நாட்டுக்கு செல்ல வேண்டுமென்றாலும் செல்லுங்கள், அமெரிக்காவுக்கு கூட செல்லுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

தடுப்பூசியிலிருந்து தப்பிக்க நினைப்பவர்கள் செல்லும் நாடாக இந்தியாவையும், மற்ற நாடுகளையும் அவர் கூறியிருப்பதும் ,
தடுப்பூசியை மக்கள் போட்டுக்கொள்ள அவர்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு பதிலாக அதிகாரத்தன்மையை நிலைநாட்ட நினைப்பதும் உலகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

Exit mobile version