பிறந்த 10 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை வீசிச் சென்ற பெண்!

திருவள்ளூரில் பிறந்து 10 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை கூடையில் வைத்து வீசி சென்ற பெண்ணை காவல்துறையினர் தேடி வருகின்றனர். நரசமங்கலம் கிராமத்தில் உள்ள கோயில் அருகே, பச்சிளம் குழந்தை ஆதரவற்ற நிலையில் இருப்பதாக வட்டாட்சியருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற வட்டாட்சியர் விஜயகுமாரி, குழந்தையை மீட்டு தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதிதார். பச்சிளம் குழந்தையை கூடையில் வைத்து வீசிச் சென்றது யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version