”நான் போறேன் பப்பு நீ நல்லா இருக்கனும்” தற்கொலைக்கு முன் காதலனுக்கு உருக்கமான வீடியோ பதிவு

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட் பகுதியை சேர்ந்த சேர்ந்தவர் 21 வயதான நிபியா.

ஏர்வாடியில் உள்ள மருத்துவமனையில் நர்சிங் பயிற்சி மாணவியாக பயின்று வந்த இவருக்கும் வேர்கிளம்பி பகுதியை சேர்ந்த ராணுவ வீரர் ஜோ என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

இந்த நிலையில் ஜோவின் நணபர்கள் சிலர், நிபியாவிற்கு வேறு சில ஆண் நண்பர்களுடன் நெருக்கமான பழக்கம் இருப்பதாக கூற, நிபியாவை சந்தேகித்த ஜோ அவரிடம் அடிக்கடி சண்டையிட்டது மட்டுமல்லாமல் பழக்கத்தையும் குறைத்துவந்துள்ளார்.

இதனால் கடுமையான மனவேதனையில் இருந்த நிபியா, தற்கொலை செய்ய முடிவெடுத்துள்ளார்.

அதன்படி கடந்த 23-ம் தேதி காலையில் தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். முன்னதாக காதலன் ஜோவுக்கு உருக்கமான வீடியோ பதிவையும் எடுத்து வாட்ஸ் ஆப்பில் அனுப்பி வைத்துள்ளார்.

தூக்க மாத்திரை உட்கொண்ட பின்பு தூக்குமாட்டி தற்கொலை செய்யலாம் என்று முடிவெடுத்து, கழுத்தில் தனது துப்பட்டாவை மாட்டிய பின் நான் போறேன் பப்பு நீ நல்லா இருக்கனும் என்று கூறிய படி வீடியோ பதிவை செய்து காதலனுக்கு அனுப்பி வைத்து தூக்கில் தொங்கி உயிரை மாய்த்து கொண்டுள்ளார் நிபியா. 

இது தொடர்பாக ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் தெரிவித்ததன் அடிப்படையில், நிபியா உடலை மீட்டு கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உடல் கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தியத்தி வருகின்றனர்.

இறப்பதற்கு முன் நிபியா பதிவு செய்த விடியோவையும்,  தன் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என நிபியா எழுதிவைத்த கடித்தத்தையும் போலீசார் கைபற்றி, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version