மேட்டுப்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு நேர்ந்த அவலம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த முதியவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

மேட்டுப்பாளையத்தில் சேக் பாவா என்ற 61 வயது முதியவர், வீட்டில் தனியாக இருந்த 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர், துடியலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து, அந்த முதியவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணை வீட்டில் தனியாக இருந்த சிறுமியை மிரட்டி தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது. பின்னர் அவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.

Exit mobile version