கஜா புயல் நிவாரணம் தொடர்பாக மத்திய குழுவுடன் கிரிஜா வைத்தியநாதன் இன்று ஆலோசனை

கஜா புயல் நிவாரணம் தொடர்பாக மத்திய குழுவுடன், தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தலைமையிலான குழு டெல்லியில் இன்று ஆலோசனை நடத்துகிறது. கஜா புயல் நிவாரணமாக 15 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து முதலமைச்சர் பழனிசாமி வலியுறுத்தினார்.

இதனை தொடர்ந்து கஜா புயல் பாதித்த பகுதிகளில் மத்தியக் குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர். ஆய்வு செய்து ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில் இதுவரை அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. இந்நிலையில், கஜா புயல் பாதிப்புகளுக்கு உரிய நிவாரணம் வழங்கவும், நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ள வலியுறுத்துவதற்காக தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தலைமையிலான குழு டெல்லிக்கு சென்றுள்ளது.

இதனிடையே இன்று மத்திய குழுவினருடன் இன்று ஆலோசனை நடத்தி அறிக்கை மற்றும் நிதியை விரைந்து வழங்க வலியுறுத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version