கஜா புயலால் திருச்சி – ராமேஸ்வரம் உள்ளிட்ட பயணிகள் ரயில் சேவை ரத்து

கஜா புயல் காரணமாக திருச்சி- ராமேஸ்வரம் பயணிகள் ரயில் மற்றும் மதுரை – ராமேஸ்வரம் பயணிகள் ரயில் இன்று ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தின் பல பகுதிகளில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், திருச்சி – ராமேஸ்வரம் பயணிகள் ரயில் மற்றும் மதுரை – ராமேஸ்வரம் பயணிகள் ரயில் இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Exit mobile version