அரசு மருத்துவமனைகளில் தனியார் மருத்துவமனைகளுக்கு இணையான சிகிச்சை அளிக்கப்படுகிறது- சுகாதாரத்துரை அமைச்சர் தகவல்

தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக, அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5 லட்சத்தில் இருந்து 8 லட்சமாக உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், தெருநாய்களுக்கு கருத்தடை செய்யும் நடவடிக்கை கால்நடைத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், வெறிநாய் கடிகளுக்கு தாலுகா அளவில் மருந்துகள் இருப்பது உறுதி செய்யப்பட்டு வருகிறது எனவும் குறிப்பிட்டார்.

 

Exit mobile version