லஞ்சம் தர மறுத்ததால் பிறப்பு சான்றிதழில் தந்தை பெயரை மாற்றிய அரசு மருத்துவமனை ஊழியர்

விழுப்புரம் அருகே லஞ்சம் தர மறுத்ததால் பிறப்பு சான்றிதழில் தந்தை பெயரை மாற்றிய அரசு மருத்துவமனை ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் ஜி.ஆர்.பி பகுதியை சேர்ந்த ராஜவேலின் மனைவிக்கு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

குழந்தைக்கு மருத்துவமனையிலேயே பிறப்பு சான்றிதழ் வழங்க கோரி ராஜவேல் விண்ணப்பித்துள்ளார்.

இந்த நிலையில், மருத்துவமனை ஊழியர் அருள் என்பவர் லஞ்சம் கேட்டு குழந்தையின் பிறப்பு சான்றிதழ் வழங்காமல் அலைக்கழித்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே, லஞ்சம் தர மறுத்ததால் குழந்தையின் பிறப்பு சான்றிதழில் தந்தையின் பெயரை மருத்துவமனை ஊழியர் தவறாக பதிவிட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட ராஜவேல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

Exit mobile version