பொறியியல் – பொதுப்பிரிவு, தொழிற்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்!

பொறியியல் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு மற்றும் தொழிற்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.

தமிழ்நாட்டில் உள்ள 461 பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் வரும் 1 லட்சத்து 63 ஆயிரத்து 154 இடங்களில் சேருவதற்கான ஆன்லைன் கலந்தாய்வை தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் நடத்துகிறது.

இதில் பங்கேற்க 1 லட்சத்து 12 ஆயிரம் மாணவர்கள் தகுதி பெற்ற நிலையில், கடந்த அக்டோபர் 1-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் போன்ற சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இந்நிலையில், பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு திட்டமிட்டபடி இன்று நடைபெறுகிறது. வரும் 28-ம் தேதி வரை நடைபெற உள்ள பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு 4 கட்டங்களாக நடைபெறும் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

Exit mobile version