கிரீஸ் நாட்டில் ஹோட்டலில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர்.
கிரீஸ் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள பிலோபென்னசி மாகாணத்தில் இயங்கி வந்த ஹோட்டல் ஒன்றில் திடீரென கேஸ் சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியது. இதனை தொடர்ந்து ஹோட்டல் முழுவதும் தீ பரவியதையடுத்து, பொதுமக்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். இந்த கோர விபத்தில் ஓட்டலின் பெண் ஊழியர்கள் 2 பேர் மற்றும் ஓட்டல் உரிமையாளரின் மனைவி ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிர் இழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.