ஒவ்வொரு போட்டிக்கும் வீரர்களை மாற்றிக் கொண்டே இருப்பது நல்லதல்ல : கங்குலி

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளுக்கும், திறமையாக விளையாடும் வீரர்களை நிரந்தரமாக தேர்வு செய்ய வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள கங்குலி, ஒருநாள், டெஸ்ட், இருபது ஓவர் என ஒவ்வொரு போட்டிக்கும் வீரர்களை மாற்றிக் கொண்டே இருப்பது நல்லதல்ல என தேர்வுக்குழுவுக்கு அறிவுரை வழங்கி உள்ளார். திறமையாக விளையாடும் வீரர்களை தேர்வு செய்து நிரந்தரமாக அனைத்து விதமான போட்டிகளுக்கும் பங்கேற்க வைக்க வேண்டும் என்றும், இதனால் வீரர்களின் நம்பிக்கை அதிகரிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் இளம் வீரர் சுப்மன் கில், அணியில் தேர்வு செய்யப்படாதது ஆச்சரித்தை அளிப்பதாக கங்குலி தெரிவித்துள்ளார்.

Exit mobile version