காதல் விவகாரத்தில் நண்பனை காட்டிக் கொடுக்காத இளைஞரை சரமாரியாக வெட்டிய கும்பல்

 

சென்னை அருகே தாம்பரம் பகுதியில் நண்பன் குறித்து விசாரித்தவர்களிடம் தெரியாது என்று கூறியவரை 4 பேர் கும்பல் சரமாரியாக வெட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அங்குள்ள காந்திநகர் பகுதியில் வெட்டுப்பட்டு கிடந்த இளைஞர் விஜய், சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசாரிடம் கிடைத்த சிசிடிவி காட்சி அவர்களை அதிரவைத்துள்ளது.

அதில், சம்பவத்தன்று விஜயை திடீரென சுற்றி வளைக்கும் நால்வர் கும்பல், தாங்கள் மறைந்து வைத்திருந்த அரிவாள், கொடுவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரி வெட்டியும் குத்தியும் தாக்குகிறது. நிலைகுலைந்து கீழே சரிந்த விஜயை, எழுப்பிவிட்டு விரட்டிவிரட்டி வெட்டுகின்றனர்.

அந்தப் பயங்கர சம்பவம் தொடர்பாக அலெக்ஸ் என்பவனை கைது செய்துள்ள போலீசார், மீதமுள்ள 3 பேரையும் தேடி வருகின்றனர். காதல் விவகாரத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

 

Exit mobile version