கரூரில் அதிமுக நிர்வாகிகள் மீது திமுகவினர் கொலைவெறி தாக்குதல்

கரூரில் திமுகவினர் நடத்திய கொலை வெறி தாக்குதலில் அதிமுக நிர்வாகிகள் படுகாயமடைந்தனர்.

கரூர் வெங்கமேடு பகுதியில் அதிமுக நிர்வாகிகள் இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த திமுக நிர்வாகிகள் நடத்திய கொலைவெறி தாக்குதலில் வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் தர்மலிங்கம் மற்றும் வேங்கை ராமச்சந்திரன் ஆகியோர் படுகாயமடைந்தனர். இதையடுத்து இருவரும் கரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Exit mobile version