விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு அனுமதி இல்லை!

ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால், விநாயகர் சிலை ஊர்வலத்தை அனுமதிக்க இயலாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில், கொரோனா தொற்று பரவலை தடுக்கவும், பொதுமக்கள் நலன் கருதியும் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவுவதற்கோ, சிலைகளை வைத்து விழா கொண்டாடவோ அனுமதிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்லவோ, அச்சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கவோ அனுமதிக்க இயலாது என்றும், விநாயகர் சதுர்த்தி பண்டிகையை அவரவர் வீடுகளிலேயே கொண்டாட அறிவுறுத்தப்படுகிறது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பண்டிகை கொண்டாட தேவையான பொருட்களை வாங்க கடைகள் மற்றும் சந்தைகளுக்கு செல்பவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திட வேண்டும் எனவும், அனைத்து இடங்களிலும் சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிறிய கோயில்களில் பொதுமக்கள் வழிபட அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், வழிபாடு செய்யும் போது வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் எனவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version