விநாயகர் சதூர்த்தி: தலைமைச்செயலாளர் ஆலோசனை!!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து 17 இந்து அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்களோடு தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை மேற்கொண்டார். 

வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி விநாயகர் சதூர்த்தி கொண்டாடப்படவுள்ள நிலையில், இந்து முன்னணி, விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட 17 அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்களோடு தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை மேற்கொண்டார். தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக சிலைகள் வைப்பது, வழிபாடு நடத்துவது மற்றும் சிலைகளை கரைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. அப்போது, டிஜிபி திரிபாதி, உளவுத்துறை ஐஜி ஈஸ்வர மூர்த்தி,சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் ஆகியோர் உடனிருந்தனர்.

Exit mobile version