காந்தி பிறந்தநாள் கொண்டாட்டம்: திரைப்படத்துறையினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்

டெல்லியில், மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தின கொண்டாட்டம் குறித்து திரைப்பட மற்றும் பொழுதுபோக்கு துறையினருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, படைப்பாற்றல் சக்தி அளப்பறியது என்றும், நமது நாட்டின் நலனுக்காக அதை பயன்படுத்தப்படுவது அவசியம் என்றும் குறிப்பிட்டார். காந்தியின் போதனைகளை பரப்பும் விவகாரத்தில் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி துறையை சேர்ந்தவர்கள் சிறப்பாக பணியாற்றி இருப்பதாகவும் மோடி தெரிவித்தார். இந்த கூட்டத்தில், ஷாருக்கான், அமீர்கான், கங்கணா ராவத் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்றனர்.

Exit mobile version