காந்தி நினைவு தினம் : முதலமைச்சர் தலைமையில் அமைச்சர்கள், அதிகாரிகள் உறுதிமொழி ஏற்பு

மகாத்மா காந்தி 72வது நினைவு நாளையொட்டி சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். நாடு முழுவதும் இன்று மகாத்மா காந்தியின் 72ஆவது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற தீண்டாமை ஒழிப்பு உறுமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் தலைமையில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டு தீண்டாமை ஒழிப்பு உறுமொழியை ஏற்றுக்கொண்டனர்.

Exit mobile version