தமிழக வீரர் மாரியப்பனுக்கு கேல் ரத்னா விருது!

பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் மற்றும் கிரிக்கெட் வீரர் ரோகித் ஷர்மா உட்பட 5 பேருக்கும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு ஆண்டுதோறும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா, துரோணாச்சார்யா ஆகிய விருதுகளை வழங்கி மத்திய அரசு கௌரவித்து வருகிறது. இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன், கிரிக்கெட் வீரர் ரோகித் ஷர்மா, மேஜை பந்தாட்ட வீராங்கனை மணிகா பத்ரா, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், ஹாக்கி வீராங்கனை ராணி ஆகியோருக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் வீரர் இஷாந்த் சர்மா, கபடி வீரர் தீபக் உட்பட 27 பேருக்கு அர்ஜூனா விருதும், நரேஷ்குமார், கிருஷ்ண குமார் ஹுடா உள்ளிட்டோருக்கு துரோணாச்சார்யா விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. இறகு பந்தாட்ட வீராங்கனை துருப்பி முர்கண்டே, தடகள் வீரர் குல்தீப் சிங் புல்லர் உட்பட 5 பேருக்கு தயானந்த் சந்த் விருதும் வழங்கப்பட இருக்கிறது.

 

Exit mobile version