திருவாரூரில் கஜா நிவாரண பொருட்கள் உரிய அனுமதி பெற்ற பிறகே வழங்கப்படும்-மாவட்ட ஆட்சியர்

திருவாரூரில் தேர்தல் விதிமுறைகள் அமலில் இருப்பதால், கஜா நிவாரணப் பொருட்கள் உரிய அனுமதி பெற்ற பிறகே வழங்க முடியும் என மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருவாரூர் இடைத்தேர்தல் குறித்து அனைத்து கட்சியினர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கஜா புயல் நிவாரணம் குறித்து கருத்து தெரிவித்த மாவட்ட ஆட்சியர் நிர்மல் ராஜ், தேர்தல் அறிவிப்புக்கு முன்பே நிவாரண பொருட்கள் மற்றும் நிவாரண தொகை பாதிக்கப்பட்டவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும், தற்போது தேர்தல் விதிமுறைகள் அமலில் இருப்பதால் நிவாரண பொருட்களை உரிய அனுமதி பெற்ற பிறகே வழங்க முடியும் என தெரிவித்துள்ளார்.

Exit mobile version