21 மையங்கள் மூலமாக தரமான உணவு தயாரிக்கப்படுகிறது – அமைச்சர்கள் தங்கமணி மற்றும் சரோஜா

முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு தயாரிக்கப்படும் உணவுகளின் தரத்தை, அமைச்சர்கள் தங்கமணி மற்றும் சரோஜா ஆகியோர் திடீர் ஆய்வு செய்தனர்.

கஜா புயலால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு அரசின் சார்பாக உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு பல்வேறு உதவிகளும் அரசின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. நாகை, கீழ்வேளூரில் உள்ள உணவு தயாரிப்பு கூடங்களுக்கு சென்ற அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சரோஜா, கீழ்வேளூர் ஊராட்சிக்குட்பட்ட 37 ஒன்றியங்களில், 21 மையங்கள் மூலமாக உணவு தயாரிக்கப்பட்டு வருவதாகவும், ஒவ்வொரு மையங்களிலும் பயிற்சி அளிக்கப்பட்ட அங்கன்வாடி ஊழியர்களைக் கொண்டு தரமான முறையில் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறினர்.

குழந்தைகளுக்குத் தேவையான பால் பொருட்கள் முறையாக வழங்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் சரோஜா தெரிவித்தார்.

 

 

 

 

 

Exit mobile version