கஜா புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்ட அரசு மருத்துவமனைகளில் கட்டணம் இல்லை – சுகாதார துறை உத்தரவு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்ட அரசு மருத்துவமனைகளில் ஸ்கேன் எடுப்பதற்கு கட்டணம் வசூலிக்க கூடாது என்று, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

புயல் பாதிப்பு சீரமைப்பு பணிகளை தமிழக அரசு முடுக்கி விட்டுள்ள நிலையில், அனைத்து பகுதிகளிலும் சீரமைப்பு பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், அரசு மருத்துவமனையில் ஸ்கேன் எடுப்பதற்கு கட்டணம் செலுத்த வேண்டாம் என்று தமிழக சுகாதார துறை அறிவித்துள்ளது. நாகை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் ஸ்கேன் எடுப்பதற்கு கட்டணம் வசூலிக்க வேண்டாம் என்று சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. டிசம்பர் 15 ஆம் தேதி வரை ஸ்கேன் எடுப்பதற்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Exit mobile version