புயலால் சேதமடைந்த விவசாய பகுதிகளை கணக்கெடுக்கும் பணி தீவிரம்

திருவையாறு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் புயலால் சேதமடைந்த விவசாய பகுதிகளை கணக்கெடுக்கும் பணியில் தோட்டக்கலை அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

திருவையாறு மற்றும் அதனை சுற்றியுள்ள கல்யாணபுரம், வளப்பகுடி, நடுகாவிரி உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்ட வாழை, வெற்றிலை கொடிகால் உள்ளிட்டவை புயலால் முற்றிலும் சேதமடைந்தன.

தமிழக அரசின் ஆணைக்கிணங்க பாதிப்பு குறித்து கணக்கெடுக்கும் பணியில் தோட்டக்கலை அலுவலர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் புயலினால் தங்கள் வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளதாகவும், உடனடியாக தமிழக அரசு தங்கள் வாழ்வாதாரத்தை மீட்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

Exit mobile version