கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1 கோடி மதிப்பிலான அரிசி மூட்டைகளை அமைச்சர்கள் அனுப்பிவைத்தனர்

புயல் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மக்களுக்கு ஒரு கோடியே 63 லட்சம் மதிப்பிலான அரிசி மூட்டைகளை லாரிகளில் அமைச்சர்கள் அனுப்பிவைத்தனர்.

கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சியினர் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட பல்வேறு மாவட்டங்களில் தமிழக அமைச்சர்கள் முகாமிட்டு மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு கோடியே 63 லட்சம் மதிப்பிலான 3 லட்சத்து 10 ஆயிரத்து 650 கிலோ அரிசி மூட்டைகளை 17 லாரிகளில் அமைச்சர்கள் எம்.ஆர்.

விஜயபாஸ்கர், கருப்பணன், சி.விஜயபாஸ்கர், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கொடியசைத்து அனுப்பிவைத்தனர்.

Exit mobile version