புயல் பாதிப்புகள் சீரான பின்பு, பாதிக்கப்பட்ட மக்களின் வங்கி கணக்கில் நிவாரணத்தொகை – அமைச்சர் விஜயபாஸ்கர்

புயல் பாதிப்புகள் சீரான பின்பு, பாதிக்கப்பட்ட மக்களின் வங்கி கணக்கில் நிவாரணத்தொகை செலுத்தப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் உள்ள அரசு மகளிர் கலைக் கல்லூரி மற்றும் மன்னர் கல்லூரியில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்ளைச் சந்தித்த அவர், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விண்ணப்ப தேதியை நீட்டித்து தரும்படி மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தோம் என்றும், மத்திய அரசு சாதகமான பதிலை அறிவிக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாக கூறினார்.

புதுக்கோட்டையில், புயல் பாதிப்புகள் சீரமைக்கப்பட்ட பின், பாதிக்கப்பட்ட மக்களின் ஆதார் அட்டை, வங்கி கணக்கு ஆகியவை சரிபார்த்து, அவர்களது வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

 

 

 

Exit mobile version