கஜா புயல் பாதித்த பகுதிகளில், 10-வது நாட்களாக தொடரும் மின்னிணைப்பு பணிகள்

கஜா புயல் பாதித்த பகுதிகளில், மின் இணைப்பு பணிகளில் மின் வாரிய ஊழியர்கள் கடந்த 10 நாட்களாக இரவு பகல் பாராது பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
புயல் பாதித்த மாவட்டங்களில் சேதமான மின் கம்பங்களை சீரமைக்கும் பணிகள் 10-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான மின் கம்பங்கள் சாய்ந்தன.

சீரமைப்பு பணிகளை தமிழக அரசு முடுக்கி விட்டதை அடுத்து, மின் இணைப்பு வேகமாக வழங்கப்பட்டு வருகிறது. 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள், தொடர்ந்து இரவு பகல் பராமல் பணியாற்றி வருகின்றனர். அறந்தாங்கி பகுதியில் 70 சதவீதமும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 35 சதவீத வரையும் மின் விநியோகம் வழங்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

 

 

Exit mobile version