கஜா புயல் நிவாரணத்துக்கு திமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி

கஜா புயல் நிவாரணத்துக்கு திமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதியுதவியை அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வழங்கினார்.

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை துரைமுருகன் சந்தித்தார். அப்போது, கஜா புயல் நிவாரண நிதியாக திமுக சார்பில் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சரிடம் துரைமுருகன் வழங்கினார்.

இதேபோன்று, புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் கஜா புயல் நிவாரண நிதியாக 20 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சரை நேரில் சந்தித்து வழங்கினார்.

Exit mobile version