திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பு புதுக்கோட்டை, நாகை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கஜா புயல் பாதிப்பில் இருந்து மீளாத நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கஜா புயலால் நாகை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இங்கு ஆயிரக் கணக்கான மரங்களும், மின் கம்பங்களும் சாய்ந்துள்ளன. ஒரு லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் சேதம் அடைந்திருப்பதால் அவற்றை சரி செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், திருவாரூரில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து, மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

 

 

 

Exit mobile version