கஜா புயலினால் பெரும் பாதிப்பை எதிர்க்கொண்ட மாவட்டங்களில் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட  உத்தரவு 

தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

கஜா புயலினால் பெரும் பாதிப்பை எதிர்க்கொண்ட நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இரவு பகலாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. காற்றின் வேகத்தை தாக்கு பிடிக்க முடியாமல் விழுந்த மின்கம்பங்களை அகற்றிவிட்டு புதிய மின் கம்பங்களை நடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துக்கொடுக்கும் பணியில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் புயலினால் பாதிக்கப்பட்ட தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மேலாண் இயக்குநர் கிர்லோஷ் குமார் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

 

 

 

 

 

Exit mobile version