புயல் மிகக்கடுமையாக பாதித்த 4 டெல்டா மாவட்டங்களில் மீட்பு பணிகளை துரிதப்படுத்த மேலும் 11 அமைச்சர்கள் நியமனம் 

புயல் மிகக்கடுமையாக பாதித்த 4 டெல்டா மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த மேலும் 11 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நாகை மாவட்டத்திற்கு அமைச்சர்கள் கே.பி. அன்பழகன், எம்.சி. சம்பத், பெஞ்சமின், ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தஞ்சை மாவட்டத்திற்கு அமைச்சர்கள் செங்கோட்டையன், உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டத்திற்கு அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், கே.சி. கருப்பணன், பாஸ்கரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே மீட்பு மற்றும் நிவாரண பணிகளை துரிதப்படுத்த 5 அமைச்சர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், தற்போது கூடுதலாக 11 அமைச்சர்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

 

Exit mobile version