கஜா புயலையொட்டி பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், மீட்பு நடவடிக்கைகள் குறித்து இரவு முழுவதும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டார்.
கஜா புயல் கரையை கடக்க தொடங்கியதிலிருந்து, புயல் பாதிக்கும் மாவட்டங்களில் அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்த அவர், செய்தியாளர் சந்திப்பின் மூலம் தொடர்ந்து மக்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்கினார்.
மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொண்ட அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், புயலை ஒட்டி 100 சதவீத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.