4 கிலோமீட்டர் வேகத்தில் நகரும் கஜா புயல் – மெதுவாக நகர்வதால் கரையைக் கடப்பது தாமதமாகும் என தகவல்

கஜா புயல் 15 ஆம் தேதி பிற்பகல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது, மேலும் தாமதமாகலாம் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான கஜா புயல், கடலூர் – பாம்பன் இடையே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை அருகே 690 கிலோமீட்டர் தொலையில் உள்ள கஜா புயல் மணிக்கு 4 கிலோமீட்டர் வேகத்தில் மெதுவாக நகர்வதால் கரையைக் கடக்க கால தாமதம் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 7 கிலோமீட்டர் வேகத்தில் இருந்து 5 கிலோமீட்டர் வேகத்திற்கு குறைந்த கஜா புயல், தற்போது 4 கிலோமீட்டர் வேகத்தில் மெதுவாக நகர்வதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

 

Exit mobile version