திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாயை தூர்வார ரூ.80 லட்சம் நிதி ஒதுக்கீடு

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்திலுள்ள, தென்கால் கண்மாயை தூர்வார நிதி ஒதுக்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் மகேந்திரன் நன்றி தெரிவித்தார்.

திருப்பரங்குன்றத்திலுள்ள தென்கால் கண்மாயை தூர்வாரி கரையை பலப்படுத்த வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைக்கிணங்க, கண்மாயை தூர்வார 80 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அதன்படி, கண்மாயிலுள்ள கருவேல மரங்களை அகற்றும் பணிகளை பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் மாயகிருஷ்ணன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டனர். இது குறித்து, தென்கால் பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் மகேந்திரன் கூறுகையில், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு செயல்பட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக நன்றி தெரிவித்து கொள்வதாக கூறினார்

Exit mobile version