நாடாளுமன்ற மைய அரங்கில் வாஜ்பாயின் முழு உருவப்படம்

நாடாளுமன்றத்தில், முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் முழு உருவப்படம் வைக்கப்பட இருக்கிறது. மைய அரங்கில், மகாத்மா காந்தி, தாகூர், இந்திரா காந்தி உள்ளிட்டவர்களின் உருவப்படங்கள் உள்ளன. பிறந்த நாள் மற்றும் நினைவு தினத்தின் போது, அவர்களின் படத்திற்கு எம்.பி.க்கள் மலர்தூவி மரியாதை செலுத்துவது வழக்கம்.

தற்போது, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உருவப்படத்தை அங்கு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வாஜ்பாயின் பிறந்த நாளான வரும் 25 ஆம் தேதி, அவரின் உருவப்படம் திறக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

Exit mobile version