இன்று முதல் 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது!

சென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மாநகரம் முழுவதும் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, இன்று முதல் 31-ம் தேதி வரை 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மாநகர காவல்துறை சார்பில் 288 இடங்களில் வாகன சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு 18 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேவையின்றி சாலையில் சுற்றித்திரியும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், முகக் கவசம் அணியாமல் செல்லக்கூடிய பொதுமக்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. ஜெமினி மேம்பாலம் மூடப்பட்டவுள்ள நிலையில், அண்ணா சாலை போக்குவரத்து காவல்துறை மற்றும் சட்டம் ஒழுங்கு காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Exit mobile version