தமிழகத்தில் நாளை தளர்வில்லா முழு ஊரடங்கு!

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில், தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு நள்ளிரவு முதல் கடைபிடிக்கப்படுகிறது.

கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் பல்வேறு தளர்வுகளுடன், வரும் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. நோய் தொற்று பரவலை குறைக்கும் வகையில், தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், நள்ளிரவு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதால், கடைகள் திறக்கப்படாது. பால் விநியோகம் மற்றும் மருந்து கடைகளுக்கு மட்டும் அனுமதி உண்டு. எனவே அவசியமின்றி பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என தமிழக சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

 

Exit mobile version