கள்ளக்காதலன் பேச மறுத்ததால் விரக்தியடைந்த பெண் வீடியோ அனுப்பி தற்கொலை!

சிவகங்கை மாவட்டத்தில், கள்ளக்காதலன் பேச மறுத்ததால் வீடியோ வெளியிட்டு பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் கே.வி.கோட்டையை சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர் தனது கணவர் சுப்பிரமணியனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வந்துள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த பிரபுதேவா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், திடீரென ராஜேஸ்வரியுடன் பேசுவதை பிரபுதேவா நிறுத்திக்கொண்டுள்ளார். செல்போனையும் ஸ்விட்ச் ஆஃப் செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் விரக்தியடைந்த ராஜேஸ்வரி, கள்ளக்காதலன் பிரபுதேவாவுக்கு வீடியோ ஒன்றை அனுப்பி தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், ராஜேஸ்வரியின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Exit mobile version