இன்று முதல் விசாரணை பணிகளை தொடங்குகிறார் பொறுப்பு தலைமை நீதிபதி

சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட வினீத் கோத்தாரி இன்று முதல் வழக்குகளை விசாரிக்க உள்ளார்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமானி பணியிடமாற்ற விவகாரத்தினால் தனது பணியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவாவை ஏற்றுக்கொண்ட குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பொறுப்பு தலைமை நீதிபதியாக வினீத் கோத்தாரியை கடந்த 20ஆம் தேதி நியமித்தார்.

இதையடுத்து, பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்ட வினீத் கோத்தாரி இன்று முதல் அலுவல் ரீதியான நிர்வாக பணிகளை மேற்கொள்ள உள்ளார். தலைமை நீதிபதி நீதிமன்ற அறையில் நீதிபதி ராமதிலகத்துடன் அமர்ந்து இன்று முதல் வழக்கு விசாரணை பணிகளை தொடங்குகிறார்.

Exit mobile version