பூர்த்தி செய்யப்பட்ட ஒப்புதல் படிவங்கள் இன்று தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைப்பு!

ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளரை தேர்வு செய்து அங்கீகரிக்க, பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அதிகாரம் அளித்தும், அவர்களிடம் இருந்து பெறப்படும் ஒப்புதல் படிவங்களை தேர்தல் ஆணையத்திடம் அதிமுக அவைதலைவர் தமிழ்மகன் உசேன் தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. இதனையடுத்து அதிமுகவில் உள்ள 2 ஆயிரத்து 665 பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அனுப்பப்பட்ட நிலையில், ஒப்புதல் படிவங்களை பூர்த்தி செய்து, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக் கழக அலுவலகத்திற்கு அனுப்பிவைத்தனர். இந்த நிலையில் பெறப்பட்ட ஒப்புதல் படிவங்களை தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்க தமிழ்மகன் உசேன், சற்றுநேரத்தில் டெல்லி செல்கிறார். உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி வேட்பாளர் தேர்வு ஒப்புதல் படிவங்கள் அனைத்தும் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திடம் இன்று ஒப்படைக்கப்படவுள்ளன.

Exit mobile version