டிக்கெட் பரிசோதகரிடமிருந்து 4 சவரன் தங்க நகை பறிப்பு

சென்னை கோடம்பாக்கத்தில் ஓடும் ரயிலில் பெண் டிக்கெட் பரிசோதகரிடமிருந்து 4 சவரன் தங்க நகையைப் பறித்துச் சென்றவரைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சென்னை கோடம்பாக்கம் ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகராகப் பணியாற்றி வரும் ரெஜினி என்பவர், தாம்பரம் செல்லும் ரயிலில் ஏறிப் பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனை செய்துவந்துள்ளார். அப்போது, மர்ம நபர் ஒருவர் ரெஜினியின் கழுத்திலிருந்த 4 சவரன் தங்க நகையைப் பறித்துக் கொண்டு, ஓடும் ரயிலில் இருந்து குதித்து தப்பியோடினர். இந்நிலையில் சம்பவம் குறித்து, ரெஜினி மாம்பலம் ரயில்வே காவல்துறையினரிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், சிசிடிவி காட்சிகளை ரயில்வே காவல்துறையினர் ஆய்வு செய்து மர்ம நபரைத் தேடி வருகின்றனர். 

Exit mobile version