கடல் முதல் வானம் வரை அனைத்திலும் ஊழல் செய்தது காங். : மோடி

கடல் முதல் வானம் வரை அனைத்திலும் ஊழல் செய்த காங்கிரஸ் கட்சி, ராணுவத்தின் துள்ளிய தாக்குதலை கொச்சைப்படுத்தியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார். திருப்பூர் மாவட்ட பெருமாநல்லூரில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், அன்பு சகோதரர்களுக்கு வணக்கம் என்று தமிழில் உரையை துவங்கினார்.

தொழில் முனைவோர் அதிகம் உள்ள பகுதி கொங்கு மண்டலம் என்றும் திருப்பூர் குமரன், தீரன் சின்னமலை உள்ளிட்டோரின் பூமி இது என்றும் பெருமிதம் தெரிவித்தார். மேலும், இந்தியாவில் 2 பாதுகாப்பு தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் என்று கூறிய பிரதமர், அதில் ஒன்று தமிழகத்தில் அமைக்கப்படும் என்று உறுதியளித்தார்.

Exit mobile version