இலங்கையிலிருந்து ஊடுருவி வந்த 2 பேர் கைது

ராமேஸ்வரம் சேராங்கோட்டை கடற்கரைப் பகுதியில் இலங்கையிலிருந்து வந்த இரண்டு பேரை, பைபர் படகுடன் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேராங்கோட்டை கடற்கரையில் இருந்து கள்ளத்தனமாக அகதிகள் தப்பி செல்வதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் பேரில், ராமேஸ்வரம் கடற்படை போலீசார் மற்றும் ராமேஸ்வரம் கியூ பிரிவு போலீசார் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது,ஒரு பைபர் படகில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் இலங்கையை சேர்ந்த சியான், சுகந்த பால யோகராஜ் என்பதும், பழனி முகாமில் தங்கியிருக்கும் இவர்களது உறவினர்கள் இருவரை கள்ளத்தனமாக அழைத்துச் செல்ல வந்ததும், தெரிய வந்தது. இதுகுறித்து கியூ பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து ஏதேனும் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்பட்டுள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version