“நண்பர்கள் தான் இந்த உலகத்தின் பெரிய வரம்” – ஹர்பஜன் ட்வீட்

ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் முதல் ஞாயிற்றுகிழமை நண்பர்கள் தினம் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான நண்பர்கள் தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை கொண்டாடும் விதமாக சமூகவலைத்தளங்களில் #HappyFriendshipDay2019, #நண்பர்கள்தினம், #FriendsForever ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இந்த ஹேஸ்டேக் மூலம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நண்பர்கள் தின வாழ்த்துகளை நேரிலும் சமூகவலைத்தளங்கள் மூலமாகவும் பகிர்ந்து வருகின்றனர்.

இதற்கிடையில் இந்திய கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் ட்விட்டரில் நண்பர்கள் தினத்திற்கு தனது வாழ்த்தை தமிழில் ட்வீட் செய்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நண்பர்களை போல இந்த உலகத்தில் பெரிய வரம் ஏதும் இல்லை” என்றும், ஜல்லிக்கட்டு சம்பவமும் சங்கமமும் நட்பால் தானே சாத்தியம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

Exit mobile version