கிராம மக்கள் பயன்பெறும் வகையில் இலவச wifi சேவை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை கிராம பகுதியில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இலவச wifi வசதியை பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கியுள்ளது.

ஒரு நபருக்கு 4 ஜிபி இலவசமாக வழங்கும் சேவைக்கும் சிங்காரப்பேடை கிராம மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.பொது மக்களின் செயல்பாடு இன்டர்நெட்டில் அதிகம் உள்ளதால் பிஎஸ்என்எல் நிறுவனம் இது போன்ற சேவையை இலவசமாக வழங்கியுள்ளதால் தேவையான விஷயங்களை பதிவேற்றம் செய்ய ஏதுவாக இருப்பதாகவும் தெரிவித்துள்ள அப்பகுதி மக்கள், அனைத்து பகுதிகளிலும் wifi வசதியை ஏற்படுத்தினால் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்தனர்.

Exit mobile version