மதுரை மாவட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இலவச புத்தகங்கள் வழங்கும் பணி

மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தமிழ்நாடு அரசு பாடநூல் கழகம் சார்பாக இலவச புத்தகங்கள் வழங்கும் பணி துவங்கியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள் என 507 மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன.
இவற்றில் பயிலும் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை சார்பில் வழங்கப்படும் இலவச பாடநூல்கள் தலைமை ஆசிரியர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது. ஜுன் 3- ஆம் தேதி பள்ளிகள் திறந்தவுடன் மாணவ, மாணவிகளுக்கு பாடநூல்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version