அரியலூர் செந்துறை அருகே நடைபெற்ற இலவச மருத்துவ சிறப்பு முகாமில் பொதுமக்கள் கலந்துகொண்டு பரிசோதனை செய்துகொண்டனர். அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சிறுகளத்தூர் கிராமத்தில் பொது சுகாதாரத் துறை மற்றும் தளவாய் தி இந்திய சிமெண்ட்ஸ் லிமிடெட் பெரம்பலூர் தனலெட்சுமி சீனிவாசன் மருவத்துவ கல்லூரி சார்பில் தமிழக முதலமைச்சரின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த மருத்துவ சிறப்பு முகாமில் அரியலூர், ஜெயங்கொண்டம், பெரம்பலூர், செந்துறை, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த கர்ப்பிணி பெண்கள், நோய் வாய்பட்டவர்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர். இலவச மருத்துவ முகாமுக்கு ஏற்பாடு செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.